மீன் அமிலம் நம் தோட்ட செடிகளுக்கு பயன்படுத்தினால் நன்கு விளைச்சலை தரும். அதை போன்ற ஒரு உரம் மண்ணுக்கு நம்மால் தர முடியாது.
செய்முறை
1.மீன் கழிவுங்கள் (மீன் கழுவிய தண்ணீர் அல்ல) மீன் துண்டுகளை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். மீன் கடையில் கேட்டால் இந்த கழிவுகளை தருவார்கள்.
2.நாட்டு சக்கரை அல்லது பனை வெல்லம் இரண்டிலும் எது வேண்டுமானாலும் நீங்கள் பயன் படுத்தி கொள்ளலலாம்.
ஒரு மிடியம் சைஸ் பிளாஸ்டிக் டப்பா வை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் அந்த மீன் கழிவுகள் மற்றும் நாட்டு சக்கரையை போட்டு நன்கு குழுக்கி விடுங்கள்.மூடி கொண்டு மூடி அதை ஒரு இடத்தில் வைத்து விடுங்கள்.
ஒரு மாதம் கழித்து அதை திறங்கள். எந்த வித துர்நாற்றமும் வீசாது.
அதை ஒரு லிட்டர் தண்ணீரில் 20மி.லீ கலவையை கலந்து மண்ணில் ஊற்றினாலும் தகும் அல்ல செடியின் இலையில் தெளித்து விடுங்கள்.
ரசாயன உரங்களை தவீர்போம். இயற்கை உரங்களை நாமே தயாரித்து நம் மண்ணை மலடு ஆகாமல் பாதுகாப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக