மீன் அமிலத்துக்கு பதிலாக சைவ உரமும் உண்டு.
வாழைப்பழம் உரம்
வாழைப்பழம் ஒரு பத்து அல்ல பதினைந்து அத்துடன் நாட்டு சக்கரை.
வாழைப்பழத்தை தோள் உரிக்காமல் அப்படியே சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளுங்கள்.
ஒரு மூடி கொண்டு டப்பா வை எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் இந்த நாட்டு சக்கரையை கலவையை போட்டுகொள்ளுங்கள்.
மூடியை கொண்டு மூடி விட்டு நன்கு குழுக்கி விடுங்கள். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்த கலவையை மேழும், கீழுமாக குழுக்கி விடுங்கள். எந்த காரணத்திற்காகவும் மூடியை திறந்து விடாதீர்கள்.
மூன்று வாரங்கள் கழிந்து டப்பாவை திறந்துபார்த்தால் கழுகிய வாடை வீசாமல் பஞ்சாமிர்தம் போன்ற ஒரு மணம் வீசும்.
அதை வடிகட்டி ஒரு லிட்டர் தண்ணீரில் ஐம்பது மி. லீ இக்கலவையை கலந்து செடியின் மேல் தெளித்து விடுங்கள்.
உங்கள் செடி நன்கு வளரும். இரசாயன உரத்தை தவீர்போம். இயற்கை உரங்களை நாமே தயாரித்து நம் மண்ணை மலடு ஆகாமல் பாதுகாப்போம்.
நன்றியுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக