பக்கங்கள்

ஞாயிறு, 31 மே, 2020

புத்தகம்

நம்ப ஏன் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அவ்வளவு ஒரு ஜாலியான விசியமா எடுத்துகுறது இல்ல னு என்னைக்காச்சும் யோசிச்சு இருப்போமா?

புத்தகம் ஒரு நல்ல தோழன் இல்லையா? நீங்க ஏன் அதை மறந்துட்டீங்க. ஒரு பெண்ண பார்த்து பேசும் போது கண்ண பார்த்து பேசனும் னு சொல்லுங்க. ஏன் அதை அப்படி சொல்றாங்க.

ஒரு பெண்ணையே கண்ணப் பார்த்து பேசும் போது நம்ப, நம்ப கூட பேசும் போது ஏதை பார்த்து பேசறது. உங்களுக்கு உங்க கூட பேசனும்மா சிம்பிள். ஒரு புத்தகம் வாங்கி அதை படிக்க ஆரம்பிங்க.

உங்க கூட பேசுறதுக்கு அது ஒரு நேரம் னு கூட வச்சிக்கலாம். கொஞ்சம் நேரம் உங்க கூட பேசி தான் பாருங்களேன். கொஞ்சம் kissava இருக்கும்.

ஒரு சின்ன கதை



ஒருவர் தினசரி கதாகாலட்சேபதிர்க்கு மாலை ஆனால் போய்் விடுவார். மனைவிக்கு கோபமான கோபம். தினசரி இப்படி போகிறாரே இவருக்கு என்ன புரியப்போகிறது என்று நினைத்து ஒரு பத்து நாள் போனபிறகு கேட்டே விட்டார்.

"ஏங்க இன்னைக்கு கதாகாலட்சேபத்திலே என்ன கதை சொன்னாங்க?/

' எனக்கு அந்த கதை சரியா புரியலே.'

அப்ப, நேத்திக்கு சொன்னது?'

'அதுவும் தான்.'

'இதுவரைக்கும் போய் கேட்டதிலேயே உங்களுக்கு புரிஞ்ச கதை எது?

'எதுவும் புரியலை'

அப்புறம் எதுக்கு தினமும் போய் வாரீங்க?' கேட்டுகொண்டே, மனைவி ராத்திரி சாப்பாட்டிற்கு பிறகு பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தார். அவர் கழுவிக் கொண்டிருந்த சல்லடையைக் காட்டி கணவர் இப்படி சொன்னார்:

அந்த வடிகட்டியில் நீ ஊத்தின தண்ணி எதுவும் நிக்கலை. ஆனால் சல்லடை சுத்தமாச்சு பாரு. அது போலதான் கதை புரியலைனாலும் கேட்கும்போது மனசு சுத்தமாகுது'

அது போலதான் புத்தகங்கள் படிக்க படிக்க , அது 2,3, நாளில் மறந்தாலும் சரி மனசில் ஏற்படும் எண்ணத்தில் சிறிது சிறிதாக மாற்றம் கொண்டு வருவதை பார்க்கலாம்.

படிக்க படிக்க அப்படி நமக்கு தேவையான சமயத்தில் வந்து, உதவிக்கரம் நீட்டும்.

புத்தகம் வாசிப்பது என்பது சுவாசிப்பது போலாகும்.


என்னைத் தேடி வந்தால் உன்னை உலகம் தேடி வரும் என்கிறது நூலகம்

எந்த வீட்டில் நூல் நிலையம் இருக்கிறது அந்த வீட்டில் ஒளி விளக்கு இருக்கிறது
பிளாட்டோ.

அவ்வளவு தான் கொஞ்சம்முயற்சி பண்ணி பருங்க......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கண் பேசும் வார்த்தைகள்

புத்தக பரிந்துரை: கண் பேசும் வார்த்தைகள் ஆசிரியர்: கவிஞர் நா.முத்துக்குமார் பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் விலை 99 நூலங்காடி : used tamilboo...