பக்கங்கள்

ஞாயிறு, 31 மே, 2020

ஒரு கத சொல்லட்டா சார்

ஒரு காலத்தில் ஒரு சிறிய பிரேசிலிய கிராமத்தின் கடற்கரையில் ஒரு தொழிலதிபர் ஓய்வு எடுத்து கொண்டிருந்தார்.

கடற்கரையில் ஓய்வு எடுத்து கொண்டிருந்த போது, ​​ஒரு பிரேசிலிய மீனவர் ஒரு சிறிய படகில் கரையை நோக்கி வருவதை கண்டார்.

அவன் பால் ஈர்க்கப்பட்ட தொழிலதிபர், மீனவரிடம், “இவ்வளவு மீன்களைப் பிடிக்க எவ்வளவு நேரம் ஆகும்?” என்று கேட்டார்.

மீனவர் - , “சில மணி நேரத்தில் பிடித்து விடுவேன் .”

"அப்படியானால், நீ ஏன் கடலில் இன்னும் அதிக நேரம் தங்கி அதிகமாக மீன் பிடிக்கக்கூடாது?" என்று தொழிலதிபர் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பினார்.

"இது எனது முழு குடும்பத்திற்கும் உணவளிக்க போதுமானது" என்று மீனவன் கூறினான் .

"அப்படியானால், நாள் முழுவதும் நீங்கள் என்ன செய்வீர்கள்?"என்று தொழிலதிபர் கேட்டார்.

மீனவர் பதிலளித்தார், “, நான் வழக்கமாக அதிகாலையில் எழுந்து, கடலுக்குச் சென்று ஒரு சில மீன்களைப் பிடிப்பேன், பின்னர் திரும்பிச் சென்று என் குழந்தைகளுடன் விளையாடுவேன்.

பிற்பகலில், என் மனைவியுடன் ஒரு சிறிய தூக்கம், மாலை வந்தவுடன் எனது கிராமத்தில் உள்ள நண்பர்களுடன் குடிப்பதற்காக சேருவோம் - கிட்டார் வாசிப்போம், இரவு முழுவதும் பாடுவோம் , நடனமாடுவோம். ”

தொழிலதிபர் சற்றே மீனவனை பார்த்து "உனக்கு நான் ஒரு யோசனை சொல்கிறேன் !!!!!!!!உன் வாழ்க்கை சிறக்க என்றார்!!!!!! "

“நான் வணிக நிர்வாகத்தில் பிஎச்டி பெற்று இருக்கிறேன் .அதனால் உன்னை மிகவும் வெற்றிகரமான நபராக மற்ற என்னால் உனக்கு உதவ முடியும்." என்றார் தொழிலதிபர்

வழிமுறை - 1

இனிமேல், நீ கடலில் அதிக நேரம் செலவிட வேண்டும் மற்றும் முடிந்தவரை பல மீன்களைப் பிடிக்க முயற்சிக்க வேண்டும்.

வழிமுறை - 2

நீ போதுமான பணத்தை வங்கியில் சேமிக்க வேண்டும் , பிறகு ஒரு பெரிய படகு வாங்கி இன்னும் அதிகமான மீன்களைப் பிடிக்க வேண்டும்.

வழிமுறை - 3

விரைவில் நீ அதிக படகுகளை வாங்கி , உன் சொந்த நிறுவனத்தை அமைக்க வேண்டும் , பதப்பட்டடுத்தப்பட்ட உணவு மற்றும் விநியோகம் தொடர்பான உங்கள் சொந்த உற்பத்தி ஆலையை நீ அமைக்க வேண்டும் .

வழிமுறை - 4

பிறகு , நீ இந்த கிராமத்திலிருந்து வெளியேறி, தலைநகரமான சாவ் பாலோவுக்குச் சென்று அங்கு உன் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை அமைக்க வேண்டும்.”

, "அதன்பிறகு?"

என்ன செய்வது என்று மீனவர் கேட்டார்

"உனக்கு கிடைக்கும் பலன்களை சொல்கிறேன் " என்று மிக பெருமையுடன் சிரித்து கொண்டே சொல்ல ஆரம்பித்தார் தொழிலதிபர்

பலன்கள் 1

" நீ ராஜாவைப் போல வாழலாம்."

பலன்கள் 2

சரியான நேரத்தில், நீ பங்குச் சந்தையில் உன் பங்குகளை விற்று , நீ பெரிய பணக்காரனாய் இருப்பாய் ."

, "அதன்பிறகு?"

என்ன செய்வது என்று மீனவர் கேட்டார்

தொழிலதிபர் கூறுகிறார், “அதன்பிறகு, நீ இறுதியாக ஓய்வு பெறலாம், மீன்பிடி கிராமத்தின் வீட்டிற்கு செல்லலாம், அதிகாலையில் எழுந்திருக்கலாம், சில மீன்களைப் பிடிக்கலாம், பின்னர் குழந்தைகளுடன் விளையாடுவதற்காக வீடு திரும்பலாம், மதியம் உன் மனைவியுடன் தூங்கலாம் மாலை வரும்போது, நீ உங்கள் நண்பர்களுடன் ஒரு மதுபானத்திற்காக சேரலாம், கிட்டார் வாசிக்கலாம், இரவு முழுவதும் பாடலாம், ஆடலாம்!" என்று தொழிலதிபர் கூறினார் .

மீனவர் சற்றே குழப்பம் அடைந்தவனாய் , "ஐயா நான் இப்போது அதைத்தானே செய்கிறேன்?" என்றான் .

தொழிலதிபர் திகைத்தார் !!!!!!!!!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கண் பேசும் வார்த்தைகள்

புத்தக பரிந்துரை: கண் பேசும் வார்த்தைகள் ஆசிரியர்: கவிஞர் நா.முத்துக்குமார் பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் விலை 99 நூலங்காடி : used tamilboo...