திரைக்கடல்
எனக்கு தெரிந்த விடயங்களை இதன் மூலம் நான் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
திங்கள், 29 நவம்பர், 2021
கண் பேசும் வார்த்தைகள்
ஆசிரியர்: கவிஞர் நா.முத்துக்குமார்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ்
விலை 99
நூலங்காடி : used tamilbooks
புத்தகத்தின் முதல் பக்கத்திலே ஆதவன் முத்துக்குமார் எழுதிய "அப்பாவின் புத்தகம்" என்ற கவிதை தொகுப்பில் தொடங்குகிறது.
ஒவ்வொரு படைப்பாளியும் பால்ய வயதில் தான் சேமித்து வைத்துள்ள அனுபவ கிடங்கில் இருந்தே தனக்கான பாடுப்பொருளை கண்டடைகிறான்.பாலய் வயதில் பாடாத கவிஞன் உண்டா ?எழுதாத கதைகள் உண்டா.
இப்புத்தகம் முழுவதும் திரை துறையில் அவர் எழுதிய பாடல்கள் உருவான சூழலைப் பற்றி சுவாரஸ்யமாக கூறியிருக்கிறார்.அவர் படித்த பச்சையப்பன் கல்லூரி,செல்லம் கணக்கு,நாயர் பாஸ்டிவ் டீ,ஐயர் ஆத்து மீன் குழம்பு எல்லாமே சேர்த்தே அவரின் வரிகளாய் அமைந்தது.
ஒரு மரத்தின் அசைவை , நதியின் ஒட்டத்தை, பறவையின் வாழ்வை வாழவைத்த கவிஞர் நா.முத்துக்குமாரின் வரிகளில் சொல்ல முடியாத மந்திரம் உண்டு என்றால் மிகை அல்ல.
Ana onnu padichi mudikira vara oru thani feel irunthuchu .....
மேலும் அறிந்து கொள்ள கண் பேசும் வார்த்தைகள் புத்தகத்தை படித்துப்பாருங்கள்.
Do follow for more book recommendation@puthaga_parinthurai
வியாழன், 26 ஆகஸ்ட், 2021
c program
C-Objective questions and answers on loops SET
புதன், 4 ஆகஸ்ட், 2021
கிடை
கிடை -கி.ரா
பக்கங்கள் -61
கிடை- கி.ரா
பக்கம் - 61
விலை -75
பதிப்பகம் -காலச்சுவடு பதிப்பகம்
காரிசல் காட்டு மண் மனம் மாறாத கதை களம்.ரெட்டை கதவு நாயக்கர்,ராமசுப்பு நாயக்கர்,பொன்னுசாமி நாயக்கர், ராக்கம்மாள் ,எல்லையப்பன்,கோபால் நாயக்கர் என கதை சூழன்றாலும் *கிடை*வே கதை .
பக்கம் 16,17,19,20களில் நிறைய ஆடுகளில் பெயரை எழுத்தாளர் குறிப்பிட்டு உள்ளார்.
கண்களை திறந்த வைத்துக் கொண்டு கண்களுக்கு ஓய்வு கொடுக்கும் காதல் பேயில் கல்லும் கசியும் படியான சோக நிறைந்தது .செவனியின் கதையும் அதுப்போல் ஒன்றே...
சிலந்தியின் பலஹுனமான வலையைப்போலவே காதல் வலையும்
அறுந்துபோய்விடுகின்றன சாதியெனும் வலையில்.......!!!!!
-நான் வாசிக்க முற்படுகையில்
#bookholic #tamilbookstagram #tamilbooks #tamilwriters #tamilnovel #tamilreader #vaasagan #tamilputhagam
#puthagam_ennum_naan #naan_vaasika_murpadukaiyil
வியாழன், 22 ஜூலை, 2021
பூட்டிய கிரில்லுக்கு அப்பால், ஒரு பெரியவர், கசங்கிய சாதாரண வேட்டி சட்டை, முகத்தில் கருப்பும், வெள்ளையுமாக மண்டிய ரோமக் காடு, நீண்ட பயணத்தால் களைத்த முகம் என, கையில் நகைக்கடை விளம்பரத்துடன் இருந்த ரெக்சின் பையுடன் நின்றிருந்தார்.
அவர் கையிலிருந்த சீட்டை பார்த்தார்.
""ஆனந்த், நம்பர். 8, யோகானந்தம் நகர்?''
""ஆமாம்... இது தான். நான் தான் ஆனந்த்... நீங்க... என்ன வேணும்?''
அவர் வறண்ட உதடுகளை, நாவால் ஈரப்படுத்திக் கொண்டார்.
""நான் உங்கப்பாவோட நண்பன்,காரைக்காலேருந்து வர்றேன். உங்கப்பா லெட்டர் கொடுத்து அனுப்பியிருக்கார்.''
பெரியவர் ரெக்சின் பை ஜிப்பை திறந்து, ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினார்.
வாங்கிப் பார்த்த ஆனந்த், ""அப்பாவா?'' என்று வினவியபடி, கடிதத்தை படித்தான்.
அதில், "அன்புள்ள ஆனந்துக்கு, அப்பா எழுதுவது. ஆசிர்வாதம். கடிதம் கொண்டு வரும் ராமசாமி, என் நண்பன். ரொம்ப கஷ்ட ஜீவனம். இவரது ஒரே பிள்ளை, சமீபத்தில் விபத்தில் இறந்து விட்டான். விபத்துக்கான இழப்பீடு கிடைத்தால், ராமசாமியும், அவர் மனைவியும் வாழ, ஓரளவாவது உதவியாக இருக்கும்.
""விபத்து சம்பந்தமான போலீஸ் விசாரணை, விபத்து ஏற்படுத்திய டிராவல்ஸ் வேன் உரிமையாளர் தர ஒப்புக் கொண்ட இழப்பீடு போன்ற சகல விவரங்களையும் சேகரித்து, அவரிடம் கொடுத்தனுப்பி இருக்கிறேன். சென்னையில், தலைமை அலுவலகத்தில் தருவார்களாம்... சென்னை அவருக்கு புதிது. நீ கொஞ்சம் அவருக்கு உதவி செய்தால் நல்லது; செய்வாய் என்று நம்புகிறேன். மற்றபடி உடம்பை பார்த்துக் கொள். பொங்கலுக்கு கண்டிப்பாக ஊருக்கு வர வேண்டும். உன் அப்பா பரமேஸ்வரன்...' என்று எழுதப்பட்டிருந்தது.
அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றார் ராமசாமி.
ஒரு வினாடி யோசித்தவன், சட்டென சாவி எடுத்து வந்து, கேட்டைத் திறந்தான்.
""வாங்க சார்... உட்காருங்க...'' என்றவன், டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். தயங்கியபடி உள்ளே வந்த ராமசாமி, தண்ணீரை வாங்கிப் பருகினார்.
""சாப்பிட்டீங்களா?''
""இல்லே... வழியிலே இரண்டு வாழைப் பழம் சாப்பிட்டேன். பஸ் லேட்டு, காலையில காரைக்கால்லே கிளம்பினா, சாயங்காலம் மெட்ராஸ் போயிடலாம்ன்னு உங்கப்பா சொன்னார். பஸ் பிரேக் டவுன் ஆயிடுச்சு... அதான்... அகாலத்திலே வந்து...''
""அதனாலே என்ன... பரவாயில்லை.''
பிரிட்ஜை திறந்து பார்த்தான் ஆனந்த்.
தோசைமாவு இருந்தது. நான்கு தோசை சுட்டு, மிளகாய் பொடி, எண்ணெய், தண்ணீர் கொண்டு வந்து, டேபிள் மேல் வைத்தான்.
""சாப்பிடுங்க... இதோ வர்றேன்,'' என்றவன், வாசல் பக்கம் மொபைலுடன் போனான்.
திரும்பி வந்த போது, சாப்பிட்டு முடித்து, கை நிறைய பேப்பர்களுடன் காத்திருந்தார் ராமசாமி.
""சொல்லுங்க... என்ன நடந்தது?'' என்று, அவர் எதிரில் அமர்ந்து, பேப்பர்களை வாங்கிப் பார்த்தான்.
பையனின் போட்டோ இருந்தது. 22 வயதில், அழகாக, பதவிசாக இருந்தான் பையன். ஆனந்துக்கு கண்கள் கலங்கின.
முகத்தை துடைத்துக் கொண்டார் ராமசாமி.
""இவனுக்கு முன்னாலே பிறந்த நாலஞ்சு பேரும், சின்ன வயசிலேயே போய் சேர்ந்துட்டாங்க... இவன் தான் தங்கினான். மகேஷ்ன்னு பேர்; கஷ்டப்பட்டு படிக்க வெச்சேன்... பொறுப்பான பிள்ளை. ஸ்காலர்ஷிப்லயே பி.இ., முடிச்சான். வேலை கிடைச்சுட்டா, நம்ம கஷ்டம் தீர்ந்துடும்ன்னு வாய்க்குவாய் சொல்வான்; வேலையும் கிடைச்சுது. என்னையும், என் மனைவியையும், நிற்க வச்சு நமஸ்காரம் செய்துட்டு, மெட்ராஸ் கிளம்பினான். பஸ் ஸ்டாண்ட் போக, ரோடு கிராஸ் செய்யறப்போ, வேகமா வந்த டிராவல் வேன் மோதி, ஸ்பாட்லேயே...'' மேல் துண்டால் முகத்தை மூடி, குலுங்கினார் ராமசாமி; பேசாமல் அவரையே பார்த்தான் ஆனந்த்.
அவராகவே தொடர்ந்தார்.
""அந்த வேன் சொந்தக்காரர், நஷ்ட ஈடு தர ஒத்துக்கிட்டார். முதல்லே அதை வாங்கவே மனசு ஒத்துக்கல. பிள்ளையை பறி கொடுத்துட்டு, அந்த பணத்திலே சாப்பிடறதான்னு வெறுப்பா இருந்தது. உங்கப்பா தான் எனக்கு ஆறுதல் சொல்லி, வாங்கிக்க சொல்லி வற்புறுத்தினார். எனக்கு நிரந்தரமா ஒரு வேலையும் கிடையாது. என் மனைவி ஏற்கனவே நோயாளி, பிள்ளை போன துக்கத்திலே, படுத்த படுக்கையாயிட்டா... எங்களை பகவான் அழைச்சுக்கற வரை, சாப்பிட்டுத் தொலைக்கணுமே... அதனாலே, கடைசியா நஷ்ட ஈடு வாங்கிக்க சம்மதிச்சேன். உங்கப்பா தான் எல்லா ஏற்பாடுகளையும் செய்து, இங்கே அனுப்பி வெச்சார். என் பிள்ளை உங்களுக்கு உதவி செய்வான்னு
லெட்டர் கொடுத்தார்.''
""செய்யறேன்... கண்டிப்பா உதவி செய்றேன்,'' என்று எழுந்தவன், அவர் படுக்க, பாயும் தலையணையும் கொடுத்தான்.
மறுநாள் காலை, காபி போட்டு அவருக்கு கொடுத்து, தானும் குடித்து, குளித்து விட்டு வந்தான்.
அவரும் குளித்து விட்டு வர, இருவருமாக பைக்கில் கிளம்பினர்.
""இங்கே நுங்கம்பாக்கம்ன்னு இருக்காமே... அங்கே தான் ஹெட் ஆபீஸ் இருக்காம்.''
""நுங்கம்பாக்கம் பக்கம் தான். நான் கூட வந்து செஞ்சு தர்றேன்,
வழியில் ஓட்டலில் டிபனை முடித்து, டிராவல் ஆபீஸ் வந்தனர்.
பார்மாலிடீஸ் எல்லாம் முடித்து, "செக்' கைக்கு வர மதியானம் ஆகி விட்டது.
""ரொம்ப நன்றிப்பா... எனக்காக ரொம்ப சிரமப்பட்டுட்டே. நான் இப்படியே ஊருக்கு கிளம்பறேன். இப்ப பஸ் புடிச்சா, ராத்திரிக்குள்ளே காரைக்கால் போயிடலாம். என் மனைவி தனியா இருக்கா; துணைக்கு ஆள் இல்லை...''
""நானே பஸ் ஏத்தி விடறேன் வாங்க,'' என்றவன், ஓட்டலுக்கு அழைத்துப் போய், அவர் மறுத்தும் கேளாமல், சாப்பிட வைத்து, தானும் சாப்பிட்டான்.
கோயம்பேடு வரை, பைக்கில் அழைத்துச் சென்று, காரைக்கால் பஸ்சில் ஏற்றி விட்டான். டிக்கட் வாங்க என்று ஐநூறு ரூபாயை, பிடிவாதமாக அவர் சட்டைப் பையில் திணித்தான்.
""ஒரு நிமிஷம்...'' என்று போனவன், ஒரு பிளாஸ்டிக் பையுடன் வந்தான்.
""ஊர் போய் சேர எத்தனை நேரம் ஆகுமோ, வழியிலே சாப்பிட்டுக்குங்க...'' என்று, டிபன் பொட்டலம், தண்ணீர் பாட்டில் அடங்கிய பையை, அவரிடம் கொடுத்தான்.
அவர் நெகிழ்ந்தார்.
""என்னாலே உனக்கு ரொம்ப சிரமம்ப்பா. லீவு வேறே போட்டுட்டு, எனக்காக அலைஞ்சிருக்கே... ஊருக்கு போனதும் முதல் வேலையா உங்கப்பாவைப் பார்த்து நன்றி சொல்லணும்.''
ராமசாமி உணர்ச்சி வசப்பட்டு பேசிக் கொண்டே போக, அமைதியாக அவர் பக்கத்தில் அமர்ந்தான், ஆனந்த்.
""ஒரு விஷயம் சார்... நீங்க தேடி வந்த ஆனந்த் நான் இல்லே...''
ராமசாமி திடுக்கிட்டார்.
""என்னப்பா சொல்றே?''
""ஆமாம்... நீங்க அட்ரஸ் தப்பா வந்துட்டீங்க... நான் இருக்கிறது, யோகானந்தம் நகர் எக்ஸ்டன்ஷன். நீங்க, மெயின் யோகானந்தம் நகர் போயிருக்கணும். அது, கிட்டத்தட்ட, 2 கி.மீ., தொலைவில இருக்கு.''
ராமசாமிக்கு, "குப்'பென வியர்த்தது.
""அடடா... தப்பு செய்துட்டேனே... ரொம்ப ரொம்ப சாரிப்பா. நீ, நான் வந்தவுடனேயே சொல்லியிருக்கலாமே... அனாவசியமா எதுக்கு எனக்காக மெனக்கட்டு...''
.
அவரைத் தடுத்தான் ஆனந்த்.
""நீங்க வந்தது ராத்திரி பத்தரை மணிக்கு... மெட்ராஸ்ல இருக்கிறவங்களுக்கே, இங்க அட்ரஸ் தேடி கண்டு பிடிக்கறது கஷ்டம்; நீங்க மெட்ராசுக்கு புதுசு வேற. அதிலேயும், நீங்க வந்த காரியத்தை பத்தி தெரிஞ்சதுலே, எனக்கு மனசு சங்கடமா போயிட்டது...
""அதான் உங்களை சாப்பிட சொல்லிட்டு, லெட்டர்லே இருந்த நம்பருக்கு கால் போட்டு பேசினேன். நீங்க அட்ரஸ் மாறி வந்த விஷயம் கேட்டு, உங்க நண்பர், அதான் அந்த ஆனந்தோட அப்பா ,ரொம்பவே வருத்தப்பட்டார். அவர் கிட்டே, அவர் பிள்ளையோட நம்பர் கேட்டு வாங்கிப் பேசிட்டு... பொழுது விடிஞ்சதும், ஒரு ஆட்டோவிலே உங்களை அனுப்பி வைக்கலாம்ன்னு இருந்தேன்.
""ஆனா, மொபைல் போன்ல பேசினது ஆனந்தோட மனைவி. அவர் ஆபீஸ் விஷயமா டில்லி போயிருக்காராம். வர ஒரு வாரம் ஆகுமாம். அப்பதான் முடிவு செய்தேன். நேரடியா, நானே உங்களுக்கு உதவி செய்திடலாம்ன்னு... எந்த ஆனந்துன்னா என்ன சார்... நஷ்ட ஈடு உங்களுக்கு கிடைக்க, நான் உதவியா இருந்தேனேன்னு, நிம்மதி என் மனசிலே நிறைஞ்சு இருக்கு. அது போதும் சார்...''
டிரைவரும், கண்டக்டரும் பஸ்சில் ஏற, எழுந்தான் ஆனந்த்.
அவன் கைகளைப் பற்றி கண்ணில் ஒற்றிக் கொண்டார் ராமசாமி. அவன் உள்ளங்கை, ராமசாமியின் கண்ணீரால் நனைந்தது.
""நல்லா இருப்பா... நல்லா இரு... வேறென்ன சொல்றது?''
பதினைந்து வருடங்களுக்கு முன் செத்துப் போன தன் அப்பாவை நினைத்துக் கொண்டான்.
"அப்பா... நீங்க இப்ப உயிரோடு இருந்து, இது மாதிரி லெட்டர் கொடுத்தனுப்பி இருந்தாலும், கண்டிப்பா உதவி செஞ்சிருப்பேன். என் வளர்ச்சியை பார்க்காமலே போயிட்டீங்களே... யாரோ ஒருத்தருக்கு பிள்ளையா இருந்து, அவர் நண்பருக்கு உதவி செய்திருக்கேன் அப்பா... உங்களுக்கு திருப்தி தானே?'
கனத்த மனதுடன், பஸ்சை விட்டு இறங்கினான் ஆனந்த்
புதன், 21 ஜூலை, 2021
படித்ததில் பிடித்தது
இருந்தபடியேதான் இருந்தாள்அந்த எழுபது வயதுக் கிழவி.
வருவோர் போவோர் தரும்இரண்டிரண்டு பிஸ்கட்கள்
அவ்வப்போது யாராவது தரும் – ஒருஅரை டம்ளர் தேநீர் சகிதம்
இருந்தபடியேதான் இருந்தாள்அந்த எழுபது வயதுக் கிழவி.
அந்த வங்கி வாசல் தேநீர் கடைஅவளின் வாடிக்கை வாழ்க்கை போல.
இடது கையில் இரண்டாயிரம்சொச்ச விலை ஷூவுடன்
இருந்தேன் நானும் அந்தஇடத்தில் ஒரு தேநீருடன்.
ஒன்றிரண்டு நிமிடங்கள்ஒருவாறாய் சிந்தித்தவன்
பர்சில் பளபளத்தபல வண்ண நோட்டுக்களில்
ஒரு நூறைக் கொடுத்துவிட்டு வந்துஒரு வாரம் ஆன பின்னும்
குனிந்து அணியும்போதெல்லாம்இன்னமும் உறுத்திக்கொண்டுதான் இருக்கிறதுஇந்த இரண்டாயிரத்து சொச்ச விலை ஷூ
திங்கள், 19 ஜூலை, 2021
cloud computing save money?
How can cloud computing save money?
Cloud computing services save money by offering businesses access to more versatile and scalable IT services. This allows clients to choose specific service levels according to their needs, rather than buying or building out an IT architecture because of a temporary demand.
One of the biggest ways that cloud computing saves businesses money is by replacing the traditional system of adding hardware to server rooms. Instead of actually purchasing expensive hardware and installing it on-site, businesses can simply order up data use or storage services through the cloud and pay temporary access fees. This revolutionary model has spawned terms like software as a service (SaaS) and platform as a service (PaaS), where vendors tout the convenience and cost efficiency of these kinds of arrangements.
Another big component of cost saving with cloud computing services relates to what’s called "on-demand service," which is supported by cloud principles like rapid elasticity. Because many cloud computing systems serve multiple tenants or clients, they can add or subtract resources from a client account quickly and easily, without a lot of cost. That means that as soon as a company doesn’t need part of its existing IP service, that company can drop that component of service and stop paying for it right away. A detailed service-level agreement (SLA) can support these kinds of options where service buyers can "turn on a dime" to save money and resources.
In addition to the above, cloud computing saves money when it enables more efficient or more effective operations. Having valuable data on hand at the right time can save money by eliminating the need for expensive travel, streamlining labor-intensive networking tasks, or helping leaders to make quick decisions about business operations. All of these can be part of how modern cloud computing services pay for themselves and more over time.
thanks for reading
shree M.E
செவ்வாய், 22 ஜூன், 2021
Books to read
சென்ற வருடம் நான் நூறு புத்தகங்களை படித்தேன்.இந்த ஆண்டு அதிக புத்தகங்களை படிக்க முடியுமா என்று தெரியவில்லை.ஆனால் சில புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
1.ஜலதீபம்
2.அசுரன் -ஆனந்த நீலகண்டன்
3.eat the frog
4.think and grow rich
5.the monk who sold his Ferrari
6.the power of your subconscious mind
7.அடுத்த வினாடி
8. Cheater's novoneel chakarborty
9.வந்தியதேவன் வாள்
10.raavanan -Amish
11.elon musk
12.shuldev
13.the silent paitent
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த புத்தகங்களை படிக்க வேண்டும் உறுதி ஏற்று உள்ளேன்.கண்டிப்பாக புத்தக விமர்சனங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றி
ஸ்ரீ
ஞாயிறு, 20 ஜூன், 2021
தந்தையர் தினம்
ஹாய் ,ஹாலோ என் இனிய வாசகர்களே எல்லோருக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.
என்னப்பாவிற்கு படிக்கத்தெரியாதுஅம்மா நான் பக்கத்து வீட்டு அக்கா என எண்ணிப் பதினேழு தொடர்புகளையே ஏந்தியிருக்குமந்த நோக்கியாவில் அவர்க்கு இரண்டு பட்டன்களே போதுமானதாகியிருக்கிறது. இன்னமும் சூரியனுக்கு முன்பாக எழுந்து வெந்நீரோடு எனை எழுப்பும் பழக்கம் அவரை விடவில்லை. கோழிக்கும் நாய்க்கும் சேர்த்து வாங்கிவரும் யாவிலும் காட்டத்தெறியாத அவர் பாசம் வெளிப்படுகிறது. சதா எங்களிடம் திட்டு வாங்குமந்த சேட்டைகளும் அப்படியேதானிருக்கிறது. முன்போல் அவர் கடிந்து கொள்வதில்லை. மவுனத்தை அதிகம் சூடிக்கொள்கிறார். சதா ஓடுமந்தக் கால்கள் நிற்க நிழல் தெடுவதில்ல.. நிழல் திருடி எனக்குக் குடையாக்கும் அந்தக் கரங்களில் மென்மை தொலைந்து வருடங்கள் பலவிருக்கும் என்பதை நான் மறந்திருந்தேன். நெளிந்து வரும் அத்தேகத்திற்கு மாடிக்காற்றில் தூங்கும் பழக்கமதிகம் அதிலொரு சுகம் புதைந்ர பெருங்கனவுண்டு.. அதை மறைத்திருக்கும் அவர் கண்கள் பிறர்வீட்டுக் கூரை மேலாக விரிய அத்தனை போராட்டம் செய்யும்...கடைசியாய் மாமன் வீட்டு படியேறிய அவர் தேய்ந்த கால்களின் நரம்புச்சுருக்கங்கள் எப்போதேனும் என் குரல்வளை நெருக்கும்..!அவரைச் சுமக்குமந்த சைக்கிளின் துரு ஒவ்வொன்றிலும் என்றென்றோ நிறேவேறிய என்னாசைகளின் எதிரொலி கேட்கும். நண்பகல் வரையிலுமான பசியை ரெண்டு டீக்குள்ளாக அடக்கிவிடும் அந்த வயிற்றுக்கென்ன பிடிக்கும் என்னென்ன பிடிக்கும் ஒரு நாள் நான் கேட்டேன் ஒரு புன்னகையோடு ஒருபிடி சோறு அம்மாவின் கையிருந்தும் என் கையிருந்தும் அவ்வளவுதான்..! எந்தக் கொண்டாட்டங்களிலும் அவரேதும் கேட்டது நினைவில்லை எப்போதாவது கொஞ்சம் கள்ளத்தனமாய் ரெண்டு பாக்கு கொஞ்சம் மூக்குப்பொடி ..!அவர்க்கு தெரிந்ததைச் சொல்வார் என் காதுகள் கேட்டும் கேட்காமலும் கடக்கும் அம்மாவிடம் பிடித்ததை கேட்பேன் காலை அப்பாவிடம் கிடைக்கும்..! இன்னும் மாறாத அந்த ரப்பர் செருப்பு பழைய கடியாரம் நான்காவது முறையாக புது ஆடி பொருந்திய அதே மூக்குக் கண்ணாடி ஃப்ரேம்கள் எல்லாம் அவரற்ற தனிமையில் என்னோடு பேசும்.. நான் அடிக்கடி வாங்கும் புதுச்சட்டைகளோடே காலர் கிழிந்த அவர் சட்டை சலவையில் மினுக்கும்.. காக்கா கடி கடித்து ஜிம்மிக்கு அவர் வீசும் அந்த பிஸ்கட்டில் கசியும் அவர் காதலுக்கு வாலாட்டுமவனிடம் எனைவிட நேசம் சொட்டும்...கொஞ்சம் காய்ச்சல் சின்னதாய் தலைவலி முள்குத்திய பாதம் என எமக்கென்றால் துடிக்குமவர் கைகளை பாதங்களின் வலிகளை வெளிப்படுத்தாத அந்தக் கல்மனம் இன்னமும் மழலையாகத் தானிருக்கிறது... நான் நூறைச் சில்லறையாகப் பார்க்குமிந்த நேரம் அவர் சட்டைப்பையில் காசுகள் துள்ளலிடுகிறது. அதை அப்படியே இரவு உண்டியல் சேர்க்குமவர் விரல்களிலான சந்தோசம் நோட்டுகள் தழுவும் என் விரல்களில் சிறிதுமில்லை..! இப்போது ஏனிப்படி ஒரு உளறல் என்கின்றீரா ? இந்தப் புலம்பல் ஏனென்று சொல்லவா? யாரோ ஒருவன் தன் தந்தைக்கான வாழ்த்தை அவரற்ற இடத்தில் வைத்தான்.. நண்பா உன் தந்தைக்குமாக எனது வாழ்த்துகளென்றான். நீயுமேதோ ஒன்றின் வழி வாழ்த்து என்றான். ஏனென்றேன் சில மகன்களுக்காக ஏன்று சொல்லிப்போனான்...! ஏனோ ? ஒரு மாத்திரைக்குள்ளாக ஒளிந்து போகும் அவர் பிணிக்கும் உணவு செரிக்க ஈனோ கேக்குமென் பிணிக்குமான பரிணாம வேறுபாடுகளை பிரித்தறிய நெடுங்காலம் தேவையாகியிருக்கிறது...இன்று அவனால் ஏனோ எனக்கது புலப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான்..!
எல்லா தந்தையர்களும் சமர்ப்பணம்.கவிதை என்னுடையதல்ல என்தோழியின் தோழர் எழுதியது ....
நன்றியுடன் ஸ்ரீ
வியாழன், 15 ஏப்ரல், 2021
gadget today
ரியல்மி C25 9999
இந்திய வெளியீடு தேதி: 8 ஏப்ரல், 2021
1 ரேட்டிங்ஸ்ரேட் நவ்|சேமிப்புதிறன் 64GB ROM
ரேம்: 4 GB ரேம் சேமிப்புதிறன் 64 GB
கேமரா 13MP+2 MP+2 MP டிரிபிள் லென்ஸ் முதன்மை கேமரா, 8 MP முன்புற கேமரா
டிஸ்பிளே 6.5 இன்ச் 720 x 1600 பிக்சல்கள், 20:9 விகிதம் (~270 ppi அடர்த்தி) ப்ராசஸ்சர்
பேட்டரி கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 6000 mAh பேட்டரி 3ஜி /4ஜிபிங்கர்பிரிண்ட் சென்சார்கள்டூயல்
இயங்குதளம் :ஆண்ராய்டு OS,11 Realme UI 2.0 கருவியின் வகை பேப்லெட் சிம் டூயல் சிம்
நிறங்கள் :எதிர்ப்புதிறன் நீலம், எதிர்ப்புதிறன் பழுப்பு
அளவுகள்: 164.5 x 75.9 x 9.6 mm
எடை 209 g
டிஸ்பிளே திரை அளவு 6.5 இன்ச் தொழில்நுட்பம் ஐபிஎஸ் எல்சிடி
ப்செட் மீடியாடெக் ஹீலியோ G70 (12 nm)
nandri
shree
C In tamil
தொடக்கத்தில் BCPL (Basic Combimed Programming Lanaguage) ஐப் பின்பற்றி B என்னும் programming language உருவாகியது. இதற்கு அடுத்து வந்த updates-ல் BCPL என்ற பெயர் 'BCPL'-ல் உள்ள இரண்டாவது எழுத்தான C-ஐ எடுத்துக் கொண்டு 'C programing language' என பெயர் மாற்றி அமைத்தனர். இதுவே நாளடைவில் C language என்று அனைவராலும் அழைக்கபடுகிறது. பின்னர் ++ என்ற addition symbol-ஐ சேர்த்து இதன் வழிவந்த 'C++' programming language-ஆகா சேர்த்துக் கொண்டனர்.
C language Introduction
புதிதாக C programming-ஐ கற்பவர்களுக்கு இந்த tutorial மிக எளிதாக புரிந்துகொள்ளளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த tutorial ஒவொரு topic-ஐயும் programs உடன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
What is C language
C language என்பது system applications-களை உருவாவதற்கும் OS-களை இயக்குவதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு middle level computer language. இது hardware devices-களுடன் நேரடியாக தொடர்புகொள்கிறது, like drivers, kernels, etc.
C programming அனைது programming languages-க்கும் base-ஆகா கருத படுகிறது, ஆகையால் தான் இது mother language என்று அழைக்கபடுகிறது.
Usage of C Language
UNIX Operating System C Language-ஐ பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.
Developing database Systems
Word Processors
Graphics Packages
Scientific/Engineering Applications
Spread Sheets
Office automation
CAD/CAM Applications
History of C Lanaguage
C Programming என்பது computer-ல் பயன்படுத்தப்படும் ஒரு computer language. இது 1970-ல் America-வின் AT&T (Amerian Telephone and Telegram) என்ற Bell laboratory(Lab)-ல் பிரையன் கேர்நிங்காம் (Brian Kernighan) மற்றும் டென்னிசு ரிச்சி (Dennis Ritchie) ஆகியோரால் உருவாக்கப் பட்டது.
தொடக்க காலகட்டத்தில் 1970-களில் UNIX OS-க்கு மட்டுமே C Language இயங்கியது. பின்னர் ஏனைய OS-களிலும் இயக்கும் வகையில் மிகப் பெருமளவில் பயன்படுத்தப்படும் language-ஆகா மாறியது. புதிதாகக் computer கற்றுகொள்பவர்களுக்கு ஏற்ற language-ஆகா இல்லாவிடினும் மிக விரைவாக இயங்கியதால் computer OS-களை உருவாக்கவும் வேறு பயனுள்ள software-களை உருவாக்கவும் இது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
nandri
shree
புதன், 24 பிப்ரவரி, 2021
படித்ததில் ரசித்தது....
படித்ததில் ரசித்தது....
ஒரு ஆங்கிலேயரும், ஒரு இந்தியரும் உரையாடி கொள்கிறார்கள்..!!இந்தியரைப் பார்த்து ஆங்கிலேயர் கேட்கிறார்...
ஆங்கிலேயர் : உங்கள் நாட்டில் உள்ள பெண்கள் ஏன் ஆண்களிடம் கை குலுக்க மறுக்கிறார்கள், கை குலுக்குவது அப்படியொன்றும் தவறு இல்லையே...
இந்தியர் : உங்கள் நாட்டு மகாராணியிடம் உங்கள் நாட்டை சேர்ந்த பாமர மக்கள் கை குலுக்க முடியுமா..?
ஆங்கிலேயர் : அது முடியாதே...
இந்தியர் : ஏன் முடியாது..?
ஆங்கிலேயர் : அவர்கள் எங்கள் நாட்டு ராணி ஆயிற்றே...
இந்தியர் : உங்கள் நாட்டை பொறுத்தவரை ராஜாவின் மனைவி மட்டும் தான் ராணி, ஆனால் எங்கள் நாட்டை பொறுத்தவரை அனைத்து பெண்களும் எங்களுக்கு மகாராணிகள் தான்.
இந்த பதிலை கேட்டவுடன்... ஆங்கிலேயர் வாயடைத்துப் போனார்..
ஆங்கிலேயரிடம் உரையாடிய இந்தியர் வேறு யாருமல்ல..
"சுவாமி விவேகானந்தர்
வியாழன், 24 டிசம்பர், 2020
இப்பொழுது கல்லூரி படித்து கொண்டு இருக்கும் போது எப்படி தேர்வுக்கு படிப்பது? இதற்கு பதில் சொல்ல முடியுமா?
இந்த கேள்வியே தப்பு. கல்லூரியில் படிக்கும் நீங்கள் ஏன் தேர்வுக்கு படிக்கிறிர்கள். கல்லூரியில் நீங்கள் படிக்கும் பாடம் உங்களை உங்கள் துறை சார்ந்து அறிந்துக் கொள்ளும் ஒரு வழி தவிர வேறு எந்த இடத்திலும் உங்களுக்கு உங்கள் தேர்வு மதிப்பெண் உதவாது.
பாட திட்டத்தை தவிர்த்து நெறைய கற்றுக் கொள்ள முயலுங்கள். Additional course படியுங்கள்.course era,udemy போன்ற இணையதளங்களில் இலவசமாக படிக்கலாம். நீங்கள் எந்த துறை சார்ந்தவர்களாக இருந்தாலும் ஏதாவது ஒரு coding கற்றுக் கொள்ளுங்கள்.
சரி இப்ப நீங்க கேட்ட கேள்விக்கு வரேன். முதலில் இத மண்டையில் ஏத்தி விடுங்கள். கல்லூரியில் உங்கள் வினாத்தாளை யாரும் முழுவதும் படித்து பார்க்க மாட்டார்கள்.
தேர்விற்கு தயாராகும் நீங்கள் ஒரு கேள்வி படிச்ச அந்த கேள்வியோட heading அ தவிர மத்த எதையும் மண்டையில் ஏற்ற கூடாது.
கல்லூரியில் வினாத்தாள் திருத்தும் நபருக்கு ஒரு நாளைக்கு இத்தனை வினாத்தாள் திருத்த வேண்டும் என்ற டார்கெட் இருக்கும். அவுங்க அத தான் பாப்பாங்க (யாரும் கோபித்து கொள்ள வேண்டாம்)
அவ்வளவு அவசரமாக இருக்குறவங்களுக்கு உங்க பேப்பர் அஹ படிக்க டைம் இருக்காது. ஆனா நமக்கு மார்க் வேண்ணும். அவுங்க நம்ப பாக்குற அந்த குறைந்த நேரத்தில் அவுங்க கையில் இருந்து மார்க் வாங்கிடனும்.
Attractive அஹ எழுதனும். அதுக்காக தப்பு தப்பு எழுத சொல்ல. ஆனா நம்ப இந்த கேள்வி படிச்சி இருக்கோம் னு உணர்த்திடனும்.
எடுத்துக்காட்டு ipv4. னு ஒரு கேள்வி எடுத்தா
- .What is ipv4 னு எழுதனும்
- அதோட packet diagram போடனும் அதுல உள்ள parts அஹ explain பண்ணும்
- அதோட types அத explain பண்ணும்
- example இருந்த அத எழுதனும், comparison இருந்த அத எழுதனும்.
- advantages, disadvantages எழுதனும் இப்படி தான் ஒரு கேள்வியை படிக்கனும் exam லையும் இப்படி தான் எழுதனும்
ஒரு கேள்வியை thus or since explained னு போட்டு தான் முடிக்கனும்.
இதெல்லாம் 16 மார்க் கேள்விக்கு. இதே two marks அஹ இருந்தா
- what is ipv4 னு எழுதனும்
- அதோட example குடுக்கணும் example இருந்தா.
Presentation ரொம்ப முக்கியம்.இது என்னோட self notes அதுனால red கலர் use பண்ணி இருக்கேன். நீங்க வயலெட், பிளாக், பிங்க் கலர் யூஸ் பண்ணலாம். சிலர் பிங்க் யூஸ் பண்ணா கூடாது னு சொல்லுவாங்க.நீங்க படிக்கும் போதே 10 மார்க் கேள்விக்கு 3 பக்கம் எழுதுற மாறி தான் படிக்கனும்.
கேள்விக்கு மார்க் தகுந்த மாறி மட்டுமே படியுங்க, எழுதுங்க. கேள்விக்கு சரியா பதில் சொல்லிட்டேன் னு நினைக்கிறேன்.
நன்றி
Shree
செவ்வாய், 22 டிசம்பர், 2020
tnpsc update
- குரூப் 1 தேர்வில் கருப்பு நிற பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- 9.15 மணிக்கு பிறகு யாரும் தேர்வு அறைக்குள் அனுமதிப்பட மாட்டார்கள்.தேர்வர்கள் ஆதார் எண்ணை ஒரு முறை பதிவேற்றத்தில் (OTR) இணைத்தால் மட்டுமே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய முடியும். அப்போது மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்ய முடியும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது
1 .எல்லாத்தையும் படிச்சி முடிச்சிட்டு உறுதிமொழிக்கீழ உங்க கையெழுத்த போடுங்க.
2. உங்க details crt அஹ னு check pannikonga.
3.கருமை நிற பேனா மட்டுமே யூஸ் பண்ணணும்.
5.உங்க கைரேகை வச்சதுக்கு அப்புறம் உங்க கைய துடைச்சிடனும். உங்க கைரேகை எங்கையும் பேப்பர் ல பதிய கூடாது.
6.barcode சேதப்படுத்த கூடாது.
7.வினாதொகுப்பு எண் தவறாக குறிப்பிட்டால் உங்களது வினாத்தாள் சொல்லாது.
8.answer தெரில னா option E அஹ choose பண்ணணும். அப்படி எந்த option னும் choose பண்ணாம விட்டா உங்க பேப்பர் சொல்லாது.
.நன்றி
Shree
கண் பேசும் வார்த்தைகள்
புத்தக பரிந்துரை: கண் பேசும் வார்த்தைகள் ஆசிரியர்: கவிஞர் நா.முத்துக்குமார் பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் விலை 99 நூலங்காடி : used tamilboo...
-
காமராஜர் விருதுநகரில் 1903-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். இவர் நாடார்...
-
மீன் அமிலத்துக்கு பதிலாக சைவ உரமும் உண்டு. வாழைப்பழம் உரம் வாழைப்பழம் ஒரு பத்து அல்ல பதினைந்து அத்துடன் நாட்டு சக்கரை. வாழைப்பழத்தை தோள் உரி...
-
மாதொரு பாகன் - எழுத்தாளர் பெருமாள் முருகனின் எழுத்தாளர் பெருமாள் முருகனின், 'மாதொரு பாகன்' என்ற நாவல், 'திருச்செங்கோட்டில் உள்ள...